செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,981 பேருக்கு கொரோனா: 166 பேர் பலி

Published On 2021-10-16 04:23 GMT   |   Update On 2021-10-16 04:23 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,981  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17, 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3,40,53,573 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,33,99,961 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,51,980  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது  2,01,632 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 



கடந்த 24 மணி நேரத்தில் 8,36,118 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 97,23,77,045 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News