செய்திகள்
நல்லம்பள்ளி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் தற்கொலை
நல்லம்பள்ளி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூரை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 30). பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை சஞ்சீவி வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சஞ்சீவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.