செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை- 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
புதுடெல்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா முதலமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தளர்வுகளால் கொரோனா மேலும் அதிகரிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 38,949 பேருக்கு தொற்று