செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

Published On 2020-10-17 01:58 GMT   |   Update On 2020-10-17 01:58 GMT
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 73 பேர் பலியாகி உள்ளதாகவும், பெங்களூருவில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 7,542 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 51 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 73 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 8,580 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 28 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 12 ஆயிரத்து 427 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் 946 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரில், பாகல்கோட்டையில் 76 பேர், பல்லாரியில் 174 பேர், பெலகாவியில் 289 பேர், பெங்களூரு புறநகரில் 345 பேர், பெங்களூரு நகரில் 3,441 பேர், பீதரில் 14 பேர், சாம்ராஜ்நகரில் 62 பேர், சிக்பள்ளாப்பூரில் 270 பேர், சிக்கமகளூருவில் 101 பேர், சித்ரதுர்காவில் 95 பேர், தட்சிண கன்னடாவில் 220 பேர், தாவணகெரேயில் 280 பேர், தார்வாரில் 121 பேர், கதக்கில் 45 பேர், ஹாசனில் 195 பேர், ஹாவேரியில் 32 பேர், கலபுரகியில் 66 பேர், குடகில் 105 பேர், கோலாரில் 69 பேர், கொப்பலில் 41 பேர், மண்டியாவில் 246 பேர், மைசூருவில் 404 பேர், ராய்ச்சூரில் 38 பேர், ராமநகரிர் 75 பேர், சிவமொக்காவில் 136 பேர், துமகூருவில் 173 பேர், உடுப்பியில் 211 பேர், உத்தரகன்னடாவில் 111 பேர், விஜயாப்புராவில் 73 பேர், யாதகிரியில் 34 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானவர்களில் பெங்களூரு நகரில் 24 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், துமகூருவில் 4 பேர், சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, தார்வார், ஹாசன், குடகு, மைசூரு, சிவமொக்காவில் தலா 3 பேர் உள்பட மொத்தம் 73 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 64 லட்சத்து 61 ஆயிரத்து 694 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 891 மாதிரிகள் அடங்கும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News