செய்திகள்
மரணம்

திருமங்கலம் அருகே வீட்டில் தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பலி

Published On 2019-11-06 11:43 GMT   |   Update On 2019-11-06 11:43 GMT
திருமங்கலம் அருகே வீட்டில் தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் சோழவந்தான் ரோட்டைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் முப்பிடாதி பாண்டியராஜ் (வயது 20). இவர் மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 4-ந் தேதி வீட்டில் முப்பிடாதி பாண்டியராஜ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்தார். தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த பாண்டிய ராஜை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு முப்பிடாரி பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News