செய்திகள்
வெவ்வேறு இடங்களில் 2 மோட்டார் சைக்கிள் திருட்டு
வெவ்வேறு இடங்களில் 2 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெங்கமேடு கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 41). இவர் கரூர் ராமானுஜம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதேபோன்று புலியூர் அமராவதி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (52) தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.