லைஃப்ஸ்டைல்
கண்களைத் திறந்து கொண்டு தியானம்

கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்தால் ஏற்படும் மாற்றங்கள்

Published On 2020-10-07 02:14 GMT   |   Update On 2020-10-07 02:14 GMT
கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்வதை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் வந்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையைப் புரிந்து தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
பொதுவாக தியானத்தை நாம் இரண்டு வழிகளில் செய்யலாம். முதலாவது கண்களை மூடிக்கொண்டு செய்வது. இரண்டாவது கண்களைத் திறந்து கொண்டு செய்வது. கண்களைத் திறந்து கொண்டும் எளிதாகத் தியானம் செய்யலாம். 

முதலில் வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு அகல் விளக்கோ அல்லது ஏதாவது ஒரு விளக்கோ வைத்து பின் அதில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியைத் தொடர்ந்து  பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மால் எவ்வளவு நேரம் அந்த ஒளியைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.

விளக்கில் இருந்து வரும் ஒளியானது நம்  கண்கள் வழியாக ஊடுருவிச் சென்று  ஆன்மாவைத் தொடும். இப்படிச் செய்வதால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இதை நாம் தொடர்ந்து செய்து வரலாம். இப்படிச் செய்து வருவதால் நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும். இந்த வகையான தியானத்தை எப்போதெல்லாம் நமக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம் .

இதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் வந்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையைப் புரிந்து தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
Tags:    

Similar News