செய்திகள்
கோப்புபடம்

மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகள் ஆர்வம்

Published On 2021-09-27 04:32 GMT   |   Update On 2021-09-27 04:32 GMT
பருத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் வரத்தும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
அவிநாசி:

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. கடந்த மாதம், 11-ந் தேதி முதல் மறைமுக டெண்டர் ஏல முறை அமலுக்கு வந்தது. 

தொடக்கத்தில் 5 வியாபாரிகள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்ற நிலையில், தற்போது 10 வியாபாரிகள் வரை பங்கேற்க தொடங்கி உள்ளனர். பருத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் வரத்தும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.  

கடந்த வாரம் 41 டன் அளவு பருத்தி வரத்தாக இருந்தது. அவிநாசி, கருவலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவு விவசாயிகள் பங்கேற்கின்றனர். வரும் வாரத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் மேலும் விவசாயிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது என கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News