செய்திகள்
கோப்புபடம்

மயிலாடுதுறை அருகே நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் பலி

Published On 2021-09-08 09:45 GMT   |   Update On 2021-09-08 09:45 GMT
மயிலாடுதுறை அருகே நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தரங்கம்பாடி:

அரக்கோணம் குறுக்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் மும்மூர்த்தி (வயசு 31). இவருக்கு திருமணமாகி மகள்-மகன் உள்ளனர். லாரி ஓட்டுனர். நேற்று மாலை அரக்கோணத்தில் இருந்து லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு அருகே லாரியை நிறுத்தி இருந்தார்.அப்போது காரைக்காலை சேர்ந்த சங்கர் மகன் பழனி (25) ஓட்டி வந்த லாரி நின்று கொண்டிருந்த லாரி மீதுமோதியதில் மும்மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

செம்பனார்கோவில் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைககு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

Tags:    

Similar News