தோஷ பரிகாரங்கள்
ஆஞ்சநேயர்

அனுமனுக்கு செய்யும் வழிபாடும்... தீரும் பிரச்சனைகளும்...

Published On 2022-04-13 06:41 GMT   |   Update On 2022-04-13 06:41 GMT
முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம்.
அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பார். இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த செந்தூர நிறம், உயிராற்றலின் நிறம்.

மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் செந்தூரத்தை தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ‘ஏன்?’ என்று கேட்டார். அதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீர்வதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார்.

* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.

* முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.

* அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங் களும் அகலும்.

* மல்லிகை எண்ணெய் மனநிலையை மேம்படுத்த உதவும். செந்தூர பொடியை மல்லிகை எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.

* செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டும்.
Tags:    

Similar News