செய்திகள்
கேரளா, அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

கேரளா, அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2021-04-06 02:44 GMT   |   Update On 2021-04-06 02:44 GMT
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
புதுடெல்லி:

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 3 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு இன்று தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் 337 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். 

அதே சமயம் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Tags:    

Similar News