செய்திகள்
சசிகலா

5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெ. நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன்: சசிகலா

Published On 2021-10-16 07:17 GMT   |   Update On 2021-10-16 11:34 GMT
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, அதிமுக-வை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார்கள் எனக் கூறினார்.
சசிகலா இன்று காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய பின்னர், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன் . ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு ஏன் தாமதமாக வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர். இருவரும் அதிமுக-வை காப்பாற்றுவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News