ஆன்மிகம்
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், பல்வேறு இனிப்பு, கார பலகாரங்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், பல்வேறு இனிப்பு, கார பலகாரங்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
மாலையில் நடந்த சாமி, அம்மன் திருவூடல் விழாவில் சுந்தரமூர்த்தி நாயனார், இருவரையும் சமரசம் செய்து கோவிலுக்கு அழைத்து வரும் காட்சிகள் நடைபெற்றது.இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சரவணன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.