தொழில்நுட்பச் செய்திகள்
ஃபேஸ்புக் ப்ரொடெக்ட்

ஃபேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை- தவிக்கும் ஃபேஸ்புக் பயனர்கள்

Published On 2022-03-19 05:53 GMT   |   Update On 2022-03-19 05:53 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த மாதமே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களை ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் மெயில் அனுப்பியது. அவ்வாறு செய்யவில்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த முடக்கம் அமலுக்கு வந்ததாக பல ஃபேஸ்புக் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.



ஹேக்கர்களால் ஃபேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. பயனர்கள் உடனே செட்டிங்ஸுக்கு சென்று தங்களுடைய ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்தால் மட்டுமே அவர்களால் உள் நுழைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News