உள்ளூர் செய்திகள்
காய்கறிகள்

கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

Published On 2021-12-05 10:38 GMT   |   Update On 2021-12-05 10:38 GMT
கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் காய்கறிகள் மொத்தம் ரூ.77 லட்சத்து 2 ஆயிரத்து 441-க்கு விற்பனை ஆனது.
கோபி:

கோபி அருகே உள்ள மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சுண்டப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 735 வியாபாரிகள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 782 கிலோ காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.77 லட்சத்து 2 ஆயிரத்து 441-க்கு விற்பனை ஆனது. மொத்தம் 965 நுகர்வோர்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்று உள்ளனர்.

இந்த தகவலை மொடச்சூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Tags:    

Similar News