ஆன்மிகம்
மழை முத்துமாரியம்மன்

மழை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-09-30 04:37 GMT   |   Update On 2021-09-30 04:37 GMT
திருவாடானை தெற்கு நடுத்தெருவில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருவாடானை தெற்கு நடுத்தெருவில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பூத்தட்டு ஊர்வலம், பூச்சொரிதல், அம்மன் கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News