செய்திகள்
ரேஷன் கடையில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

ரேஷன் கடைகளில் கலெக்டர் அதிரடி ஆய்வு

Published On 2021-06-18 08:24 GMT   |   Update On 2021-06-18 08:24 GMT
கொரோனா சிகிச்சை மைய வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருவம்பாளையம், ஆலங்காடு கூட்டுறவு மொத்த விற்பனை ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சர்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள், மின்னணு எடை எந்திரங்களின் செயல்பாடு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து குமரன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை முறைகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உணவு முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.கொரோனா சிகிச்சை மையத்தின் வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News