கே.கே.நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
போரூர்:
கே.கே.நகர், சிவன் பூங்காவில் சந்தேகபடும் படி 3 பெண்கள் சுற்றி திரிவதாக இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவி, காளியம்மாள், இசக்கியம்மாள் என தெரிய வந்தது.
இவர்கள் 3 பேரும் சென்னையின் பல்வேறு இடங்களில் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்களை நோட்டமிட்டு கவனத்தை திசைதிருப்பி அவர்களிடம் இருந்து கைப்பை, மணிபர்ஸ் ஆகியவற்றை திருடிவிட்டு போலீசில் சிக்காமல் சொந்த ஊருக்கு தப்பி சென்றுவிடுவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மீண்டும் திருட்டில் ஈடுபட வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.