செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ராஜஸ்தானில் இன்று மேலும் 802 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-16 17:11 GMT   |   Update On 2020-09-16 17:11 GMT
ராஜஸ்தானில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,700 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 7 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,271 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 17,541 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 86,333 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News