செய்திகள்
தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சாதியினரும் கொண்டாட வேண்டும்- வைகோ வேண்டுகோள்
சிறைபட்டிருந்த ஆண்டுகள் தவிர கடந்த 46 ஆண்டுகளாக தேவருக்கு தொடர்ந்து மரியாதை செய்து வருவதாக வைகோ தெரிவித்தார்.
மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் சிறைபட்டிருந்த ஆண்டுகள் தவிர கடந்த 46 ஆண்டுகளாக தேவருக்கு தொடர்ந்து மரியாதை செய்து வருகிறேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோசை தலைவராக ஏற்றுக்கொண்டவர் தேவர்.
அதுமட்டுமின்றி பிரம்மச்சரியத்தை கடைபிடித்து ஒழுக்க சீலராக தன்வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். அவரது ஜெயந்தி நாளை அனைத்து சாதியினரும் கொண்டாட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.
அப்போது அவரது மகனும், ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளருமான துரை வைகோ, புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் பாஸ்கர சேதுபதி, மகபூப்ஜான் ஆகியோர் இருந்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் சிறைபட்டிருந்த ஆண்டுகள் தவிர கடந்த 46 ஆண்டுகளாக தேவருக்கு தொடர்ந்து மரியாதை செய்து வருகிறேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோசை தலைவராக ஏற்றுக்கொண்டவர் தேவர்.
அதுமட்டுமின்றி பிரம்மச்சரியத்தை கடைபிடித்து ஒழுக்க சீலராக தன்வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். அவரது ஜெயந்தி நாளை அனைத்து சாதியினரும் கொண்டாட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.
அப்போது அவரது மகனும், ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளருமான துரை வைகோ, புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் பாஸ்கர சேதுபதி, மகபூப்ஜான் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... 3 மக்களவை, 29 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது