செய்திகள்
கைது

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 3 பேர் கைது

Published On 2021-04-05 04:05 GMT   |   Update On 2021-04-05 04:05 GMT
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்:

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க புதுவையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களது பரிந்துரையின்படி அரியாங்குப்பம் போலீசார் சுனாமி குடியிருப்புக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை, போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், வீராம்பட்டினம் சிவாஜிநகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ், முகிலன் என்பதும், காங்கிரஸ் கட்சி சார்பில் பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் வ.உ.சி.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக லாஸ்பேட்டை பாரதிநகரை சேர்ந்த பாலாஜி (37) என்பவரை பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News