செய்திகள்
திருச்சி கே.கே.நகரில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
திருச்சி கே.கே.நகரில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி, கே.கே.நகர் உடயன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பிள்ளையார் மற்றும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த கோவிலின் வெளிப்பகுதியில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா தலைமையிலான போலீசார் வந்து உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.