செய்திகள்
தீ

தஞ்சை அருகே வீடு எரிந்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2021-10-16 15:26 GMT   |   Update On 2021-10-16 15:26 GMT
வீடு முற்றிலும் எரிந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான டி.வி, மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமானது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது வீடு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான டி.வி, மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News