செய்திகள்
ராஜன்செல்லப்பா

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்: ராஜன்செல்லப்பா பேச்சு

Published On 2019-09-27 10:24 GMT   |   Update On 2019-09-27 10:24 GMT
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிபெறும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை:

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி கள் கூட்டத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வார்டு வாரியாக நடத்தி வருகிறார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் மகத்தான திட்டங்களை மக்களுக்கு தந்து வருகிறது. புரட்சி தலைவி அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

வருகிற நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக நாம் இப்போதே தயாராக வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளிடம் கூறி தீர்வு காண வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 100 சதவீத வெற்றியை பெறும் வகையில் நமது உழைப்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், தக்கார் பாண்டி, அம்பலம், முத்துக்குமார், ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News