உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே குட்கா விற்ற கடைக்காரர் கைது
திருவள்ளூர் அருகே குட்கா விற்ற கடைக்காரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 பாக்கெட் குட்கா சிக்கியது.
இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் ரவி (வயது 53) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.