செய்திகள்
தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் பலி
தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் கோட்தூர் ரோடு திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பா நாயக்கர் (வயது 75). நேற்று முன்தினம் இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பாநாயக்கர் உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.