ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்

Published On 2021-04-20 06:07 GMT   |   Update On 2021-04-20 06:07 GMT
குடமுழுக்கு விழாவிற்காக சொக்கநாதபெருமான் உருவச்சிலையுடன் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாதயாத்திரையை தொடங்கினார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 3 மணியளவில் புஷ்ப யாகம் நடந்தது. வேதப்பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத பிரதான அர்ச்சகர்கள் மல்லி, ரோஜா, சம்பங்கி, சாமந்தி, அல்லி, கரகாம்பரம் உள்பட 12 வகையான மலர்கள், துளசி, வில்வம் உள்பட 6 வகையான இலைகள் உள்பட 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகத்தை நடத்தினர்.

முன்னதாக காலை 10 மணியளவில் பிரதான அர்ச்சகா்கள் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந் தது. அதைத்தொடர்ந்து மதியம் பல்ேவறு வகையான பூக்கள் நிரப்பப்பட்ட மலர் கூடைகளை பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

புஷ்ப யாகத்தில் கோவில் துணை பார்வதி, தோட்ட கண்காணிப்பாளர் சீனிவாஸ், உதவி அதிகாரி துர்க்காராஜு, தோட்ட மேலாளர் ஜனார்த்தன்ரெட்டி, கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் அச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News