செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Published On 2021-06-08 05:55 GMT   |   Update On 2021-06-08 05:55 GMT
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்து 40-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது.

நேற்று பவுன் ரூ.36 ஆயிரத்து 840-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 40-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,630 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து 76 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.76.30-க்கு விற்கிறது.

 

Tags:    

Similar News