உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மாநகராட்சி ஊழியர் தற்கொலை

Published On 2022-04-16 09:48 GMT   |   Update On 2022-04-16 09:48 GMT
மாநகராட்சி ஊழியர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள வெண்ணைமலை பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 24). இவர் கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 பின்னர் ராஜசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News