செய்திகள்
கோயம்பேட்டில் வியாபாரி மீது தாக்குதல் - 2 பேர் கைது
கோயம்பேட்டில் வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர் ரஞ்சித்குமார். இவரிடம் திட்டக்குடியை சேர்ந்த மாரி என்பவர் வேலை பார்த்தார். அப்போது ரூ.40 ஆயிரம் கையாடல் செய்ததால் மாரியை வேலையை விட்டு நீக்கியதாக தெரிகிறது.
இந்தநிலையில் பணத்தை திருப்பி கேட்டது தொடர்பாக ரஞ்சித்குமாருக்கும், மாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த மாரியின் உறவினர்கள் யோகேஷ், சிவா ஆகியோர் சேர்ந்து ரஞ்சித்குமாரை பாட்டிலால் தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஷ், சிவாவை கைது செய்தனர்.