செய்திகள்
திருட்டு

நெல்லை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2021-07-27 11:03 GMT   |   Update On 2021-07-27 11:03 GMT
நெல்லை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது32), மில் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மறுநாள் காலையில் பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் கார்த்தி (31). இவரும் நேற்று முன்தினம் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார்த்தி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மோட்டார் சைக்கிள்களையும் திருடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News