உள்ளூர் செய்திகள்
தெப்ப உற்சவம்.

கமலநாத சுவாமி கோவிலில் தெப்போற்சவம்

Published On 2022-04-17 09:51 GMT   |   Update On 2022-04-17 09:51 GMT
வலிவலத்தில் 40 வருடங்களுக்குப் பிறகு கமலநாத சுவாமி கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தில் பிரசித்தி பெற்ற மனத்துணைநாதர் உடனுறை மாழையொண்கண்ணி அம்பிகை, இருதய கமல நாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 

இக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா கடந்த 7&ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சோமஸ்கந்தர் மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 3 முறை வலம் வந்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News