செய்திகள்

ஆந்திராவில் தமிழக காவலர் வெட்டிக்கொலை

Published On 2018-10-13 08:15 GMT   |   Update On 2018-10-13 08:15 GMT
ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #CopKilled #TNPolice
விசாகப்பட்டினம்:

தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் நீலமேக அமரன். இவர் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார். வேம்பேடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.



இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த தலைமைக் காவலர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #CopKilled #TNPolice

Tags:    

Similar News