தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 20

உடைந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கும் சாம்சங்

Published On 2020-08-20 08:34 GMT   |   Update On 2020-08-20 08:34 GMT
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் முன்பதிவு செய்வோர் உடைந்த ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது.


சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகை ஒன்றை சாம்சங் அறிவித்து இருக்கிறது.

அதன்படி கேலக்ஸி நோட் 20 அல்லது நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்களை வாங்குவோர் தங்களது உடைந்த ஸ்கிரீன் கொண்ட பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.



இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் முதலில் மை கேலக்ஸி செயலியில் சைன்-அப் செய்ய வேண்டும். இந்த சலுகை செயலியின் டாப் பேனரில் எக்சேன்ஜ் சலுகை விவரங்கள் வழங்கப்பட்டுள்ள. இதை பெறுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ள விளம்பர பேனரை க்ளிக் செய்ய வேண்டும்.

பின் விவரங்களை பதிவிட்டால், செயலி உடைந்த சாதனத்திற்கான சிறந்த விலையை கணக்கிட்டு தெரிவிக்கும். இனி வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள சாம்சங் ஸ்டோர் சென்று உடைந்த சாதனத்தை ஒப்படைத்து புதிய ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம். 

இந்த சலுகை அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்றும் இது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News