செய்திகள்
அரக்கோணம் அருகே பைக் மீது லாரி மோதி 2 பேர் பலி
அரக்கோணம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நாகவேடு காலணியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). 2 பேரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இன்று காலை இருவரும் நெமிலியில் இருந்து நாகவேடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து நெமிலி நோக்கி வந்த லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வெங்கடேசனும், விசுவநாதனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன், தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த நாகவேடு காலணியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). 2 பேரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இன்று காலை இருவரும் நெமிலியில் இருந்து நாகவேடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து நெமிலி நோக்கி வந்த லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வெங்கடேசனும், விசுவநாதனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன், தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.