செய்திகள்
மல்லிகைப்பூ

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம்

Published On 2021-01-17 13:01 GMT   |   Update On 2021-01-17 13:01 GMT
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 520-க்கும், முல்லை ரூ.1,640-க்கும், காக்கடா ரூ.725-க்கும், செண்டுமல்லி ரூ.125-க்கும், பட்டுப்பூ ரூ.155-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.100-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 360-க்கும், முல்லை ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,150-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.160-ம், முல்லை ரூ.240-ம், செண்டுமல்லி ரூ.55-ம், செவ்வந்தி ரூ.40-ம் என விலை உயர்ந்து விற்பனை ஆனது.
Tags:    

Similar News