செய்திகள்
கோப்புபடம்

நாகை உள்பட 29 தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் 22-ந்தேதி தொடக்கம் - கண்காணிப்பாளர் தகவல்

Published On 2021-02-20 12:01 GMT   |   Update On 2021-02-20 12:01 GMT
நாகை உள்பட 29 தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது என கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை அஞ்சலக கண்காணிப்பாளர் அஜாதசத்ரு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.அதி்ல் கூறியிருப்பதாவது:-

நாகை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நாகை தலைமை தபால் அலுவலகம், திருவாரூர் தலைமை தபால் அலுவலகம்,, மஞ்சக்கொல்லை துணை தபால் அலுவலகம், சிக்கல் துணை தபால் அலுவலகம், கீழ்வேளூர் துணை தபால் அலுவலகம், கூத்தூர் துணை தபால் அலுவலகம், திருவாரூர் கலெக்டர் அலுவலக தபால் அலுவலகம், காரைக்கால் துணை தபால் அலுவலகம்,, ஏனங்குடி துணை தபால் அலுவலகம் உள்பட 29 தபால் அலுவலகங்களில் வருகிற 22-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் புதிய ஆதார் அட்டை பெறலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி, புகைப்படம், செல்போன் எண், பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம். பிறந்த குழந்தைகள் முதல் ஆதார் பதிவு செய்யும் வசதி இந்த முகாமில் உள்ளது.

புதிய ஆதார் பதிவு செய்ய, முகவரி உள்ளிட்ட மாற்றம் செய்ய பான்கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், அஞ்சலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்த படிவம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News