செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.83 லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-11-16 05:21 GMT   |   Update On 2021-11-16 05:21 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.83 லட்சத்து, 3 ஆயிரத்து 237-ம், 2 கிலோ 930 கிராம் தங்கமும், 2 கிலோ 360 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்தமாதம் நேற்று கோவில் இணைஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர்கள் விஜயராணி(மலைக்கோட்டை), ரமேஷ்(நாமக்கல்), மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் பிருந்தாநாயகி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.83 லட்சத்து, 3 ஆயிரத்து 237-ம், 2 கிலோ 930 கிராம் தங்கமும், 2 கிலோ 360 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 74-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News