ஆன்மிகம்
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் வருசாபிஷேகம்

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் வருசாபிஷேகம்

Published On 2021-11-16 04:19 GMT   |   Update On 2021-11-16 04:19 GMT
விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், 1,008 சங்கு பூஜை, கும்ப பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சியில், சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர், செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் ஞான சுந்தரம், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News