செய்திகள்
கோப்பு படம்

திருவண்ணாமலை அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

Published On 2019-10-19 11:44 GMT   |   Update On 2019-10-19 11:44 GMT
திருவண்ணாமலை அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூரை சேர்ந்தவர் மணிகண்டன். விழுப்புரம் மாவட்டம் மணலூர் பேட்டையை சேர்ந்தவர் விமலா (வயது 25). மணிகண்டனுக்கும், விமலாவுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விமலா மணலூர் பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பனையூரை சேர்ந்த ஒரு பெண்ணை மணிகண்டன் 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்ட விமலா இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கணவர் மணிகண்டன், மாமியார் கஸ்தூரி, மாமனார் ஜெகன்நாதன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News