உள்ளூர் செய்திகள்
கைது

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் நகை பறித்து தப்பி ஓடிய 2 பேர் கைது

Published On 2021-12-07 11:30 GMT   |   Update On 2021-12-07 11:30 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் நகை பறித்து தப்பி ஓடிய 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஒரத்தநாடு:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சேர்ந்த தாஜுதீன். இவரது மகன் பைசல் அகமது (வயது 23). கோயம்புத்தூரை சேர்ந்த நூர் முகமது மகன் அகமது மு‌ஷரப் (21). இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரத்தநாடு அருகே உள்ள பரங்கி வெட்டிக்காடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் ஒரத்தநாடு துணை கண்காணிப்பாளர் சுனில் பரிந்துரைப்படி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் பைசல்அகமது, அகமது மு‌ஷரப் ஆகியோரை பிடிக்க பல்வேறு இடங்களில் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்களது செல்போன் டவர் மூலம் போலீசார் பைசல் அகமது, அகமது முஷ்ரப்பை கண்டுபிடித்து இருவரையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள், 2 செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News