செய்திகள்
கைது

353 மதுபாட்டில்கள் பறிமுதல்- 19 பேர் கைது

Published On 2021-04-06 13:42 GMT   |   Update On 2021-04-06 13:42 GMT
பேரையூர் அருகே சட்ட விரோதமாக மது விற்க முயன்றதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க பேரையூர், சாப்டூர், டி.கல்லுப்பட்டி, வில்லூர், நாகையாபுரம், சேடப்பட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்க முயன்றதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 353 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News