செய்திகள்
சீர்காழி அருகே பெண் வி.ஏ.ஓ.வை மிரட்டிய விவசாயி கைது
சீர்காழி அருகே பெண் வி.ஏ.ஓ.வை மிரட்டிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து வருபவர் ஆனந்தி (வயது 24).
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மெய்யழகன் (35) என்பவர் பட்டா சிட்டா வழங்குவது கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
நேற்று மெய்யழகன், தனக்கு பட்டா சிட்டா வழங்குவதில் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கிராம நிர்வாக உதவியாளர் ஜெயபால் என்பவரிடம் கேட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தியிடம் மெய்யழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி, சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.