செய்திகள்
வழிப்பறி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை - ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஊத்தங்கரை அருகே வழிப்பறி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த, 2018-ம் ஆண்டு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, வாலிபர் ஒருவர் நகையை பறித்து சென்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க, சாமல்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜல்லியூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, ஊத்தங்கரை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலிப், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட விக்னேசிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, விக்னேஷ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.