ஆன்மிகம்
பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு நேற்று காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர்.சுந்தரராஜி செய்திருந்தார்.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர்.சுந்தரராஜி செய்திருந்தார்.