செய்திகள்
மந்திரி சி.டி.ரவியின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றார்
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றி வந்த சி.டி.ரவி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை எடியூரப்பாவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை கவர்னர் வஜூபாய் வாலா ஏற்றுக்கொண்டுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சி.டி.ரவி. அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழகம் உள்பட தென்இந்திய மாநிலங்களின் பா.ஜனதா மேலிட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வழங்கினார்.
ஒரு மாதத்திற்கு பிறகு அவரது ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கவர்னர் வஜூபாய் வாலா ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் கர்நாடக மந்திரிசபையில் காலி இடங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது இந்த காலி இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சி.டி.ரவி. அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழகம் உள்பட தென்இந்திய மாநிலங்களின் பா.ஜனதா மேலிட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வழங்கினார்.
ஒரு மாதத்திற்கு பிறகு அவரது ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கவர்னர் வஜூபாய் வாலா ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் கர்நாடக மந்திரிசபையில் காலி இடங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது இந்த காலி இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.