ஆன்மிகம்
திருமலையில் பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சிறிய சேஷ, ஹம்ச வாகன சேவை
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடந்து வருவதால், சற்று தூரத்தில் நின்றபடி பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் மலையப்பசாமியை வழிபட்டு செல்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஹம்ச வாகன சேவை நடந்தது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடந்து வருவதால், சற்று தூரத்தில் நின்றபடி பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் மலையப்பசாமியை வழிபட்டு செல்கிறார்கள். மேலும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவ விழா நடந்து வருவதால், சற்று தூரத்தில் நின்றபடி பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் மலையப்பசாமியை வழிபட்டு செல்கிறார்கள். மேலும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.