ஆன்மிகம்
புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில்

புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் 19-ந்தேதி பங்குனி திருவிழா தொடங்குகிறது

Published On 2021-03-17 09:37 GMT   |   Update On 2021-03-17 09:37 GMT
திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான 11 நாட்கள் பங்குனி திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பாகும்.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். கடந்த வருடம் கொரோனா தாக்குதலால் திருவிழா கோவிலுக்குள் மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழா வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ம் தேதி காலை 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியும், மறுநாள் 9-ம் திருவிழாவாக தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News