செய்திகள்
நெல்லையில் ரூ.10-க்கு பிரியாணி விற்றதால் அலைமோதிய கூட்டம்
நெல்லையில் ரூ.10-க்கு பிரியாணி விற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகரில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு உணவகங்கள் பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தது.
இதே போல் நெல்லை சந்திப்பில் வேன் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று ரூ.10-க்கு ஒரு பிரியாணி பொட்டலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுவும் மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் தெரிந்தவர்கள் நேற்று மாலை 3 மணியளவில் அந்த கடை முன்பு குவிந்தனர். அவர்களை கடை ஊழியர்கள் வரிசையாக நிற்க வைத்து டோக்கன் முறையில் பிரியாணி விற்பனை செய்தனர். தங்களது கடைக்கு விளம்பரத்திற்காக இவ்வாறு சலுகை விலையில் கிறிஸ்துமஸ் சலுகையாக பிரியாணி விற்பனை செய்யப்பட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகரில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு உணவகங்கள் பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தது.
இதே போல் நெல்லை சந்திப்பில் வேன் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று ரூ.10-க்கு ஒரு பிரியாணி பொட்டலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுவும் மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் தெரிந்தவர்கள் நேற்று மாலை 3 மணியளவில் அந்த கடை முன்பு குவிந்தனர். அவர்களை கடை ஊழியர்கள் வரிசையாக நிற்க வைத்து டோக்கன் முறையில் பிரியாணி விற்பனை செய்தனர். தங்களது கடைக்கு விளம்பரத்திற்காக இவ்வாறு சலுகை விலையில் கிறிஸ்துமஸ் சலுகையாக பிரியாணி விற்பனை செய்யப்பட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.