செய்திகள்
பெருங்களத்தூர் ரெயில் நிலையம்

அசுத்தமான ரெயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தில் 6 ரெயில் நிலையங்கள்

Published On 2019-10-05 06:29 GMT   |   Update On 2019-10-05 06:29 GMT
நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாக காணப்படும் ரெயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழக ரெயில் நிலையங்கள் 6 இடங்களைப் பெற்றுள்ளன.

சென்னை:

இந்தியா முழுவதும் ஆய்வு செய்து தூய்மையான மற்றும் அசுத்தமான முதல் 10 ரெயில் நிலையங்களின் பட்டியலை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சுத்தமான ரெயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது. அசுத்தமான 10 ரெயில் நிலையங்களில் 6 ரெயில் நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன.

சுத்தமான ரெயில் நிலையங்கள் விபரம் வருமாறு:-

ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபிரா, தவாய், காந்தி நகர், சூரத்கர், உதய்பூர், அஜ்மீர், விஜயவாடா, ஹரித் வார்.


நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாக காணப்படும் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழக ரெயில் நிலையங்கள் 6 இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த வேளச்சேரி, கூடுவாஞ்சேரி. சிங்கப்பெருமாள் கோவில், பழவந்தாங்கல்  ஆகியவையும் கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட், உத்தரபிரதேசத்தை சேர்ந்த குர்ஜா ஆகியவை அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்தும் பராமரிப்பில் மிகவும் பின்தங்கி இருப்பது துரதிருஷ்டம்.

Tags:    

Similar News